வண்ணத்துப் பூச்சி கவிதை நூல் குழந்தைகளுக்கான கவிதைகளாக வெளிவந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். சில கவிதைகள் குழந்தைகள் கூறுவது போலவும், சில கவிதைகள் குழந்தைகளின் மனநிலையை பிரதிபலிப்பது போலவும் அமைந்துள்ளன. பெரியவர்கள் படிக்கும்போது அவர்களின் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்வது உறுதி. இந்த வண்ணத்துப் பூச்சி உங்கள் கரங்களில் மகிழ்ச்சியாக அமரும் என எதிர்பார்க்கின்றேன்.
கவிஞர். த. நிர்மலாதேவி