புலனாய்வு துறையில் வேலை செய்யும் அதிகாரி பாஸ்கருக்கும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அவனது மனைவி அட்சயாவுக்கும் செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் பல பிரச்சினைகள் முளைக்கின்றன.
ஏன்...?
எதற்கு...?
எப்படி...? என்று தெளிவதற்குள் பல தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன.
காவல்துறையின் விசாரணை ஒருபக்கம் நடக்க, புலனாய்வு துறையிலும் பாஸ்கர் - அட்சயா இருவரின் குடும்ப வாழ்க்கையிலும் புரிபடாத திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. முதலில்
அதிர்ச்சியில் அயர்ந்து போனாலும் இருவரும் சவாலை எதிர்கொள்கிறார்கள். இது செயற்கை நுண்ணறிவை பின்புலமாகக் கொண்டு ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட
விறுவிறுப்பான க்ரைம் நாவல்.