சமூகத்தின் முதன்மை உறுப்பினர்களாக, வல்லவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, பண்பாடு மிக்கவர்களாக, நாகரீகம் தெரிந்தவர்களாக குழந்தைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
அதற்கு உதவும் வகையில் நான் அறிந்த, அனுபவித்த, வாழ வைக்கும் நெறிமுறை உண்மைகளுடன், "அரும்புகள் உயர்வில் நமது பங்கு" என்னும் நூலை ஆக்கியுள்ளேன்.
பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களை நற்பண்பாளர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் வளர்த்து ஆளாக்குவதற்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி.