உங்களுக்காக "பண்பை வளர்க்கும் 10 கதைகள்" என்ற இந்த சிறுகதை நூலினை எழுதியுள்ளேன். ஒருவரிடம் எவ்வளவுதான் படிப்பும், பணமும் இருந்தாலும் அவருக்கு சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயர் ஏற்படக் காரணமாக அமைவது நல்ல பண்பு என்ற அடிப்படைக் குணமாகும். இது உலகறிந்த உண்மை. நீதி நூல்களைப் படிப்பதோடு மட்டுமில்லாமல் அத்தகைய நீதிநூல்கள் சொல்லும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைபிடிக்கப் பழக வேண்டும். இந்தச் செயல் உங்களை வாழ்க்கையில் நிச்சயம் உயர்த்தும்.
மாணவ மாணவியராகிய நீங்கள் இது போன்ற பல நூல்களைப் படித்து உயரிய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல பண்புகள் உங்களுடைய வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்தும்.